ஆசியான் உச்சி மாநாடு – பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்! – ஃபஹ்மி ஃபாட்சில்

top-news
FREE WEBSITE AD

ஆசியான் உச்சி மாநாடு – பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்! – ஃபஹ்மி ஃபாட்சில்

புத்ராஜெயா, ஜன 3: மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவி இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசியான் உச்சி மாநாடு உட்பட, ஆண்டு முழுவதும் மலேசியா ஏறக்குறைய 323 ஆசியான் கூட்டங்களை நடத்தும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஃபாமி எடுத்துரைத்தார்.

 மலேசியாவின் ஆசியான் தலைவர் அந்தஸ்து, மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை கொண்டு வரும், குறிப்பாக இந்த நிகழ்வுகள் நடைபெறும் மாநிலங்களில். விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் உள்ளூர் தொழில்கள் போன்ற துறைகள் பெரிதும் பயனடையும் என்று அவர் விளக்கினார்.

பங்கேற்பாளர்கள் ஆசியான் நாடுகளிலிருந்து மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் வருவார்கள். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகளின் பிரதிநிதிகளும், ஆசியான் கூட்டாளிகளும் கலந்துகொள்வார்கள். அவர்கள் உள்ளூர் பொருட்களையும் வாங்குவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர்களுடன் பிரதமரின் 2025 செய்தியின் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். இதில் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் மற்றும் அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ முகமட் ஃபௌசி முஹமட் இசா ஆகியோரும் கலந்து கொண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *