டி.ஏ.பியும் அம்னோவும் இணைந்து அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்குமா? அம்னோ MP எதிர்ப்பு!

top-news

பிப்ரவரி 3,

அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ, டி.ஏ.பி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்குமா இல்லையா என்பதை அம்னோ முடிவு செய்ய வேண்டும் என அம்னோவில் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரும் PASIR SALAK நாடாளுமன்ற உறுப்பினருமான  Datuk Seri Tajuddin Abdul Rahman வலியுறுத்தினார்.  கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ முக்கிய நாடாளுமன்றங்களில் தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் நிலையான முடிவுகளை அம்னோ எடுக்காதது தான் என்றும் பாரிசானின் பிரதமர் வேட்பாளர் யாரெனும் கேள்வியுடனே பாரிசான் கடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தது. இதனால் அம்னோ மீதான நம்பிக்கையை அதன் உறுப்பினர்களே இழந்தனர். 

அதே போல அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசானின் தேர்தல் வியூகம் இப்போதிலிருந்தே கட்டமைக்க வேண்டும் என்றும் டி.ஏ.பியுடன் இணைந்தால் அம்னோவின் அடிமட்ட தொண்டரையும் அம்னோ இழக்க நேரிடும் என PASIR SALAK தொகுதி அம்னோ ஒருங்கிணைப்பாள்ருமான Datuk Seri Tajuddin Abdul Rahman நினைவுருத்தினார். அம்னோ விரைந்து அடுத்த பொதுத்தேர்தலுக்காகத் தயாராக வேண்டும் என்றும், இழந்த நம்பிக்கையை அம்னோ மீண்டும் பெற வேண்டும் என்றும் Datuk Seri Tajuddin Abdul Rahman தெரிவித்தார்.

Bekas Ahli Majlis Tertinggi UMNO, Datuk Seri Tajuddin Abdul Rahman menegaskan UMNO perlu membuat keputusan jelas mengenai kerjasama dengan DAP dalam PRU akan datang. Beliau mengingatkan bahawa penyokong  UMNO mungkin hilang kepercayaan jika kerjasama diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *