இளைஞர்களே ஒன்றிணையுங்கள்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD


திரெங்கானு, ஜனவரி 5: ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் திரங்கானு பல்கலைக்கழகத்தின் பரதப் பண்பாட்டு கழகம் நடத்தும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று எனும் கருப்பொருளோடு இன்று  காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரையில் திரங்கானு பல்கலைக்கழகத்தின் சுல்தான் மிசன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் ஓம்ஸ் அறவாரியத்தின் முனைவர் பழனீஸ்வரன் தியாகராஜன், திரங்கானு மாநில மெந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி முனைவர் பாலசந்திரன் கோபால கிருஷ்ணன், திரங்கானு மாநில இந்து சங்கத் தலைவர் அப்பு ராசப்பன் ஆகியோர் பங்கேற்றனர். திரங்கானு பல்கலைக்கழகப் பரதம் பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவி இந்துமதி குணசீலன், தமிழ் இளையோர் மாநாட்டின் இயக்குநர் ஹேகபிஷேக் குமார் ராஜன், திரங்கானு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர் பயிற்றியல் கழக மாணவர்களும் பங்கேற்றனர்.


இம்மாநாட்டின் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து தலைமை உரையாற்றிய ஓம்ஸ் அறவாரியத்தின் மேலாளர் டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன், திரங்கானு பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓம்ஸ் அறவாரியம் சொற்போர் பட்டறையை மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் மூலமாக நடத்தியது.


அதற்கு பின்னர் திரங்கானு பல்கலைக்கழக மாணவர்கள் மலேசியா முழுவதுமாகச் சொற்போர்களில் பங்கேற்று முதல் நிலையிலும் வெற்றிகளைச் சுவைத்தனர். இந்த வேளையில் அவர்களையும் நாம் நினைவுக்கூர்வது அவசியம். காரணம் அவர்கள் தொடங்கிய பாதையிந் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு முதல் சொற்போர் திரங்கானு பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. இன்று வரையில் திரங்கானு பல்கலைக்கழகத்தில் சொற்போர் நிலைத்திருக்கிறது என்பது பெருமிதம் கொண்டாலும் பல்கலைக்கழக மாணவர்கள் நம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கும் வழி வகுக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான இளைஞர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டை தீட்டப்பட்டு நம் சமூதாயத்தின் தலைவர்களாக உருவாக வேண்டும் என்பதே ஓம்ஸ் அறவாரியத்தின் எண்ணம். தற்போதைய காலத்தில் நம்மைப் புறம்பேசும் கூட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்மை நாம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கானச் செயல்களை முன்னெடுத்தால் இளைஞர்களுக்கான வளமான ஒரு மலேசியாவை நாம் உருவாக்கலாம். நம் தாய்மொழியானத் தமிழ் மொழியையும், கலை கலாச்சாரப் பண்பாடு ஆகியனவற்றை நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தலையாய பொறுப்பை இளைஞர்கள் கொண்டிருக்கிறோம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் தெரிவித்தார்.


மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் முனைவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர். மேலும் மாநாட்டின் தொடர்ச்சியாக இளைஞர்களின் கட்டுரைப் படைப்பும் ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளில் கருத்தரங்கமும் நடைபெற்றது. கல்வி, மின்னியல், சமூக நீதி, பருவநிலை மாற்றம் எனும் தலைப்புகளில் சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் இளைஞர்கள் தலைமையேற்று தெளிவான கருத்துப் பகிர்வையும் நடத்தினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *