துங்கு அப்துல் ரஹ்மானின் 122ஆவது பிறந்த நாள் விழா-அன்வார் தொடங்கி வைக்கிறார்!

- Muthu Kumar
- 17 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 17-
காலஞ்சென்ற துங்கு அப்துல் ரஹ்மானின் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடைபெறும் வைபவமொன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
நாட்டின் சுதந்திரத் தந்தையான துங்குவின் நினைவகத்தில் மாலை 4மணிக்கு அந்நிகழ்ச்சியை அவர் தொடக்கி வைப்பார் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்
துங்கு அப்துல் ரஹ்மான் மலேசியாவின் முதல் பிரதமர் என்று மட்டும் அறியப்பட்டவர் அல்லர். மாறாக, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்கி வந்தவர்.அவரின் தலைமைத்துவம் சகிப்புத்தன்மையையும் நீதியையும் கருணையையும் அடிப்படையாக கொண்டவை. பல்வேறு இனங்களையும் சமயங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட மலேசியர்களின் ஒற்றுமைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்தவர் அவர் ஆவார் என்று தமது முகநூல் பக்கத்தில் ஏரன் அகோ குறிப்பிட்டுள்ளார்.
1903ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கெடாவின் அலோர்ஸ்டாரில் பிறந்தவரான துங்கு அப்துல் ரஹ்மான், 1957ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வரை நாட்டின் முதல் பிரதமராகப் பதவி வகித்தார்.
இதனிடையே, துங்கு அப்துல் ரஹ்மானின் வரலாற்றையும் சாதனைகளையும் முன்னிலைப்படுத்தும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் அவரின் 122ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்றும் ஏரன் அகோ கூறினார்.நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் கணிசமான அளவுக்கு துங்கு பங்காற்றியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *