துர்க்மெனிஸ்தான் – மலேசியா பல முக்கிய ஒப்பந்தம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச 19: எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த துர்க்மெனிஸ்தான் மற்றும் மலேசியா தயாராக உள்ளதாக  துர்க்மெனிஸ்தான் அதிபர் Serdar Berdimuhamedow கூறினார்.

மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம்  மேற்கொண்டுள்ள பெர்டிமுஹமடோவ், இரு நாடுகளுக்கும் இடையில் எரிசக்தி துறையில் நீண்டகால ஒத்துழைப்பை, குறிப்பாக துர்க்மெனிஸ்தானில் பெட்ரோனாஸ் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.

பெட்ரோனாஸ் பல ஆண்டுகளாக துர்க்மெனிஸ்தானில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது இன்று நடைபெற்ற அன்வாருடனான சந்திப்பில் குறிப்பிட்டார்.

எரிசக்தி பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு, கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு செயலாக்கம், இரசாயனத் தொழில், புதுமையான நகர்ப்புற திட்டமிடல், சுற்றுலா மற்றும் பல துறைகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் துர்க்மெனிஸ்தான் கூட்டுப் பணிக்கான சிறந்த வாய்ப்புகளைக் காண்கிறது என்று அவர் கூறினார்.

இச்சந்திப்பில் அன்வார் மற்றும் பெர்டிமுஹமடோவ் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

மேலும், மலேசியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான விசா ரத்து, விமான சேவை ஒப்பந்தங்கள், தூதரக அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் அறிவியல் பரிமாற்றம் தொடர்பான குறிப்புகளை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பிற்கு வழி வகுக்கும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கு இந்த பயணம் வழிவகுத்துள்ளதாக பெர்டிமுஹமடோவ் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *