குருநாதர் குழு பயண பூஜை!

- Muthu Kumar
- 03 Jan, 2025
இரா. கோபி
பல ஆண்டுகளாக ஐயப்பன் பூஜை மிகச் சிறப்பாக பூச்சோங் 14ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை 4க்கும் அதிகமான ஐயப்பன் பக்தர்கள் பொது மக்கள் இந்த சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டனர்.
பஜன பூஜைகள் நடந்து முடிந்த பிறகு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ ஏபி சிவம் சிறப்பு வருகை புரிந்தார். அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த சிறப்பு பூஜையில் ஏபிஎம் மெட்டல் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *