கடத்தல் சிகரெட்டுகளை ஏற்றியிருந்த லோரி மீது சுங்கத்துறை துப்பாக்கிச் சூடு!

top-news
FREE WEBSITE AD

கோத்தாபாரு, ஜன. 27-

ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற லோரியொன்றின் மீது கிளந்தான் சுங்கத்துறை அதிகாரிகள் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்தினர்.

சுங்கத்துறையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவினர் சந்தேகத்தின் பேரில் அந்த லோரியைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட முயன்றனர்.ஆனால், அந்த லோரியை ஓட்டிவந்த இருபது வயது மதிக்கத்தக்க நபர் ஆவேசமடைந்து தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவ்வேளையில், அதிகாரிகளையும் லோரியால் அந்நபர் மோத முயன்றார் என்று வான் ஜமால் சொன்னார்.

தற்காப்புக்காக அந்த லோரியின் வலதுபுற பின் டயரை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் மூன்றுமுறை சுட்டனர். அதில் டயர் ஓட்டையானது. ஆனாலும், ஜாலான் பாசிர் மாஸ்-ரந்தாவ் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த லோரியை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். இருந்தாலும், பாசிர் மாஸ், கம்போங் பாடாங் ஜெலாப்பாங் அருகே திடீரென்று லோரியை நிறுத்திய அந்நபர்.அதிலிருந்து கீழே குதித்து புதருக்குள் மறைந்தான் என்றார் அவர்.

அந்த லோரியில் 124 பெட்டிகளில் பன்னிரண்டு லட்சத்து நாற்பதாயிரம் சிகரெட் துண்டுகள் காணப்பட்டன. இறக்குமதி வரியுடன் சேர்த்துக் கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு பத்து லட்சம் வெள்ளிக்கும் அதிகமாகும் என்று வான் ஜமால் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *