உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்- பதிலளிக்காத உக்ரைன்!

top-news
FREE WEBSITE AD

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இந்த "ஈஸ்டர் போர் நிறுத்தம்" நேற்று 2025 ஏப்ரல் 19 சனிக்கிழமை, மாலை 6 மணி (மாஸ்கோ நேரத்திலிருந்து) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கிரெம்ளின் தனது டெலிகிராம் சேனல் மூலம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மனிதாபிமானக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இன்று 18:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் வரை, ரஷ்யப் படைகள் ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவிக்கின்றன.இந்த காலக்கட்டத்தில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தத்திற்கு உக்ரைனும் பதிலளிக்கும் என்று மாஸ்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.இருப்பினும், 2025 ஏப்ரல் 11:36 மணி IS நிலவரப்படி, கீவ்விடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.

குறிப்பாக, போர் நிறுத்த அறிவிப்புடன், உடன்படிக்கை மீறல்கள் அல்லது உக்ரைனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்று கருதப்படும் எந்தவொரு செயலுக்கும் பதிலடி கொடுக்க தங்கள் படைகள் தொடர்ந்து தயாராக இருக்கும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.அதே நேரத்தில், துருப்புக்கள் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் எதிரியின் ஆத்திரமூட்டல்கள், அதன் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் முறியடிக்க தயாராக இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *