தானாக நகர்ந்த லாரி! பலியான மோட்டார் சைக்கிளோட்டி!

- Shan Siva
- 24 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 24: கோலாலம்பூரில் உள்ள பங்சார் தெற்கில் நேற்று காலை 32 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லாரியின் அடியில் நசுக்கப்பட்டார்.
நேற்று காலை 8.34 மணியளவில் ஜாலான் கெரிஞ்சியில் ஜாலான் பந்தாய் பாரு நோக்கிச் செல்லும் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்துக் காவல்துறைத் தலைவர் ஜம்சுரி இசா தெரிவித்தார்.
கட்டுமானப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென தானாகத் திரும்பத் தொடங்கியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
வேகம் கூடி, வாகனம் பாதுகாப்பு வாயிலைத் தாண்டி பிரதான சாலையை நோக்கி லாரி நகன்ற வேளையில், பாதிக்கப்பட்டவர் எதிரே வந்த லொறியைத் தவிர்க்க முயன்றார், ஆனால் அவர் மீது மோதுவதற்கு முன் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தார்.
இதனை அடுத்து லாரியின் டயர் ஒன்றின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக ஜம்சுரி கூறினார்.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *