நம்பிக்கை கூட்டணி பலத்தால் பேராவிலும் இந்திய சமூகத்திற்கு நன்மை-சிவநேசன்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான், டிச.30-

இங்குள்ள நகர (JALAN BANDAR) சாலைப் பகுதியில் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான பலகையினால் அமைக்கப்பட்ட 49 கடைகள் உள்ளன. அவற்றில், மூன்று சகோதர சமூகத்தினர் முறைப்படி ஊராட்சியிடம் வாடகை செலுத்தி வணிகம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்திய வியாபாரிகளே இந்த வணிக மையத்தில் அதிகம் இருக்கின்றனர்.

அந்த சூழ்நிலையில், வியாபாரிகளில் பலர் தங்கள் பெயருக்கே ஊராட்சியிடம் வாடகை செலுத்தி வரும் வேளையில், சிலர் நடத்தும் அந்த கடையின் உரிமை வேறொருவரின் பெயரில் இருந்தால், அது போன்றவர்களிடம் கடையின் உரிமை இல்லாமல் வியாபாரம் செய்பவர்கள் அதிகமான பணத்தை வாடகையாக கொடுத்து வர நேரிடலாம்.

இந்நிலையில் ஊராட்சி விதித்துள்ள சட்ட ரீதியாக கடைகளை நடத்த முடியாவிட்டால், உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திடம் அக்கடை சாவியை ஒப்படைக்க வேண்டும்.மறுக்கும் போது, அரசாங்கமே அந்த பூட்டை உடைத்து ஊராட்சி நிர்வாகம் தனது பூட்டைக் கொண்டு பூட்டவும் செய்வர். அதுதான் முறையாகும். அதனால், வியாபாரம் செய்யும் கடைகள் தங்கள் பெயரில் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக சொந்த பெயருக்கே கடை வேண்டும் என்று ஊராட்சியிடம் பாரங்களைப் பெற்று புகைப்படத்துடன் கடையின் முகவரி மற்றும் கடை எண்கள் குறித்த விபரங்கள் உள்ளிட்ட மனுவை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்ட விதியாகும்.

வியாபாரிகள் ஊராட்சியிடம் நேரிடையாக செலுத்தும் வாடகைக் கட்டணம் குறைந்த அளவில்தான் உள்ளது. அதுவே ஊராட்சிக்கு தெரியாமல், யாரின் பெயரில் கடை உள்ளதோ அவர்களிடம் அதிகமான தொகையை வாடகையாக செலுத்தினால், அது எதிர்மறையான விசயமாகும். தவிர, அந்த இரு தரப்பினரும் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய்வதற்கு ஊராட்சி சட்டத்தில் இடம் கிடையாது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் சில கடைகள் மற்றவர்கள் பெயரில் இருந்தும் பல மாதங்கள் வரை வியாபாரம் செய்யத் தவறியதால் ஊராட்சி நிர்வாகம் முறைப்படி அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த 5 கடைகள் மீது அறிக்கை (NOTICE) ஒட்டப்பட்ட நிலையில் கடைகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

அந்த சூழ்நிலையில் காலியான கடைகளை பேரா அரசின் ஆட்சிக்குழு சார்பில் முறைப்படி நேர்முகத் தேர்வு மூலம் குறிப்பிட்ட 5 கடைகளும் உள்ளூர் இந்திய சமூகத்தினர்களுக்கே சட்ட ரீதியான முறையில் ஒப்பந்தத்துடன் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

பேரா மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் ஆட்சிக்குழு சார்பில் தாம் வகிக்கும் இந்திய சமூக நல விவகாரத்திற்கு பொறுப்பேற்றுள்ளதால் நான் இருக்கும்வரை என் சமுதாயம் கவலை அடையத் தேவையில்லை. நேர்மறையான முறையில், கொண்டு வரும் பிரச்சினைகளை அந்நியப்படுத்தி விடாமல் தீர்வு காண்பதே மக்கள் வழங்கிய பதவிக்கு நான் செலுத்தி வரும் மரியாதை என்றும் சுங்காய் சட்ட மன்ற உறுப்பினருமான சிவநேசன் அச்சுலிங்கம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *