சபா – சரவாக் நிவாரண மையங்களில் 800-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிப்பு!

- Shan Siva
- 03 Feb, 2025
புத்ராஜெயா, பிப் 3: சபா மற்றும் சரவாக்கில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 9,379 பேரை பரிசோதித்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு 800க்கும் `மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
கடுமையான
சுவாசக்குழாய் தொற்று தொடர்பாக 671 பேரும், தோல் தொற்று (82); கடுமையான இரைப்பை குடல் அழற்சி (27); வெண்படல அழற்சி (17); அத்துடன் கை,
கால் மற்றும் வாய் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தட்டம்மை, டைபாய்டு, லெப்டோஸ்பிரோசிஸ்,
கோவிட்-19 போன்ற நோய்கள் பதிவாகவில்லை" என்று சுகாதார அமைச்சு
இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சரவாக்கில் உள்ள 30 சுகாதார நிலையங்களில் 22 நிலையங்களும் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 சுகாதார நிலையங்களும் மீண்டும் செயல்படத்
தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
சரவாக் சுகாதாரத்
துறை 37 மருத்துவக்
குழுக்களையும் 30 சுகாதாரக்
குழுக்களையும் அனுப்பியுள்ளதாகவும், சபா சுகாதாரத் துறை 16 மருத்துவக்
குழுக்களையும் 27 சுகாதாரக்
குழுக்களையும் சம்பந்தப்பட்ட அனைத்து மையங்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சு
தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *