வெளிநாடு வாழ் மலேசியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

- Muthu Kumar
- 20 Jan, 2025
பிரெசெல்ஸ், ஜன. 20:
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தபால் வழி வாக்களிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது தொடர்பான விவகாரத்தை தாம் தேர்தல் ஆணையத்தின்
(எஸ்.பி.ஆர்.) கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.ஆர். ஒரு சுயேட்சையான அமைப்பு என்ற போதிலும், இவ்விவகாரத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும், நாட்டு மக்கள்
அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அவர்கள் வழங்க வேண்டும்
என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெல்ஜியத்தில் நடைபெற்ற சுமார் 200 புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான தேநீர் விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *