பணமோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குநர் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Dec, 2024
டிசம்பர் 18,
வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் பெற்றதாகக் கணக்குகளைக் காட்டியதாக முதலீட்டுப் பணமோசடிக் குற்றத்திற்காக 39 வயது பெண் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். உள்ளூரில் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டிலிருந்து முதலீட்டாகப் பெற்றதாகவும் நன்கொடையாகப் பெற்றதாகவும் கணக்குகளைக் காட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை Sesyen நீதிமன்றத்தில் அவர் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமீன் கோரிய நிலையில் மேலதிக விசாரணையுடன் ஜாமின் வழங்கப்பட்டது.
அவர் மீதானக் குற்றங்களை மேலதிக விசாரணை நடத்த பல்வேறு நிறுவனங்களில் கணக்கறிக்கையை மீண்டும் முழுமையாக ஆய்வும் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடியில் ஈடுப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களும் போலியானது என்பதால் கணக்கில் வராத வரி செலுத்தப்படாத வருமானங்களைத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
Seorang pengarah syarikat wanita ditahan atas tuduhan memalsukan pelaburan luar negara. Dia mengaku tidak bersalah di Mahkamah Sesyen dan dibebaskan dengan jaminan sementara siasatan diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *