போலி ஆவணத்தைக் கொண்டு மிரட்டியவரிடம் பயந்து RM155,804 இழந்த முதியவர்!

top-news

ஜனவரி 27,

போலி ஆவணங்கள் மூலமாக மிரட்டப்பட்ட 68 வயது பெண் தனது ஓய்வு ஊதிய பணமான RM155,804 தொகையை இழந்துள்ளதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். கடந்த ஜனவரி 16 அரசு அதிகாரி எனும்படியான நபரிடமிருந்து அழைப்பைப் பெற்றதாகவும் மின் கட்டணம் நீர் கட்டணம் போன்ற அரசு துறைகளை மோசடி செய்த குற்றத்திற்காகத் தாம் விசாரிக்கப்படுவதாகவும் குற்றத்திலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் தனது வங்கி கணக்கு அட்டையைப் பிலாஸ்டிக் பையில் சுற்றி வீட்டின் வெளியே வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.

மிரட்டலுக்குப் பயந்து தாமும் வங்கி கணக்கு அட்டைகளை வாசலில் வைத்த அடுத்த சில மணிநேரங்களில் தனது வங்கி கணக்கில் இருந்த RM155,804 மொத்த பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் நேற்று நண்பகல் 3.35 மணியளவில் கோலா திரங்கானு மாவட்டக் காவல் நிலையத்தில் புகாரளித்ததாகப் பாதிக்கப்பட்ட 68 வயது அரசு ஓய்வு ஊழியர் தெரிவித்தார்.

Seorang wnaita berusia 68 tahun kehilangan RM155,804 selepas ditipu sindiket penipuan telefon yang menyamar sebagai polis. Mangsa diarahkan untuk memasukkan kad dalam plastik dan meletakkannya di luar rumah.  Kesemua wangnya telah dipindahkan ke akaun lain tanpa izinnya. Polis kini menyiasat kejadian tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *