RM8,000க்குப் பிறப்புச் சான்றிதழையும் அடையாள அட்டையையும் பெற்ற வெளிநாட்டுப் பெண் கைது!

top-news

ஜனவரி 27,

போலியான அடையாள அட்டைகளையும் பிறப்புச் சான்றிதழையும் வைத்திருந்த 36 வயது இந்தோனேசிய பெண் நேற்று கைது செய்யப்பட்டதாகத் தேசிய பதிவுத் துறை JPN இயக்குநர் Mohammad Khairu Farhan Md Saad தெரிவித்தார். 
சந்தேகத்திற்குரிய பெண் குவாந்தானில் உள்ள Kampung Kempadang பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களைத் தயாரிக்கும் ஒரு கும்பலிடமிருந்து RM8,000க்குப் பிறப்புச் சான்றிதழையும் அடையாள அட்டையையும் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து இந்தோனேசியக் கடப்பிதழும் போலி மலேசிய அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதழும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக JPN இயக்குநர் Mohammad Khairu Farhan Md Saad தெரிவித்தார்.

Seorang wanita Indonesia ditangkap di Kuantan kerana memiliki dokumen palsu termasuk sijil kelahiran dan kad pengenalan yang diperolehi dengan bayaran RM8,000 daripada sindiket. Dokumen palsu tersebut dirampas untuk siasatan lanjut oleh JPN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *