தீ விபத்தில் பெண் பலி!

top-news

பிப்ரவரி 6,

தலைநகரின் செந்துல் சாலையில் Sri Terengganu அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது பெண் உயிரிழந்ததாகத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Yogeswaran Elangkovan தெரிவித்தார். 

நள்ளிரவு 12.38 மணிக்குச் செந்துல் சாலையில் அமைந்துள்ள Sri Terengganu அடுக்குமாடிக் குடியிருப்பின் 10 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்புப் பெற்றதாகவும் 20 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில் வீட்டின் குளியறையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் 50 வயதுள்ள இந்தோனேசிய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாலை 1.30 மணிக்குத் தீ முழுவதும் கட்டுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

Seorang wanita Indonesia berusia 50 tahun maut akibat kebakaran di tingkat 10 sebuah unit Flat Perumahan Awam Sri Terengganu, Sentul. Kebakaran dikawal sekitar pukul 1.30 malam dan mayat mangsa dibawa ke Hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *