3 நாளில் RM55,204 இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
முதலீட்டாளர்களுக்கானத் தரகர் என TELEGRAM பதிவை நம்பி மூன்றே நாளில் RM55,204 முதலீடு செய்த 32 வயது பெண் தாம் ஏமாற்றப்பட்டதாக கோலா திரங்கானு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று மாலை 10.19 மணிக்குப் புகாரைப் பெற்றதாகவும் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd. Noor தெரிவித்தார்.
முதலீட்டுக்கானப் பகுதி நேரத் தரகராகும் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அதற்கு முன்னதாக முதலீடுகள் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் வந்ததால் தமது சேமிப்புப் பணமான RM55,204 முதலீடு செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 9 முதல் நேற்று வரையில் முதலீடு செய்த பணத்திற்கான விவரங்கள் ஏதுமில்லை என்பதால் அது போலியான முதலீடு என தெரிய வந்ததாகவும் சம்மந்தப்பட்ட நபரையும் காணவில்லை என 32 வயது பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang wanita berusia 32 tahun kerugian RM55,204 akibat sindiket penipuan pekerjaan tidak wujud. Mangsa tertarik dengan peluang kerja sambilan di laman web, membayar yuran dan pelaburan tambahan, namun gagal mengeluarkan komisen dijanjikan walaupun tugasan selesai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *