11 நாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பலி!

top-news

ஜனவரி 28,

பேருந்து நிலையத்தில் உள்ள தெருநாய்கள் கும்பலாக ஒரு முதியவரைத் தாக்கி கடித்து குதறியதில் 60 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை 1.49 மணிக்குச் சபாவில் Kunak பேருந்து நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Kunak மாவட்டக் காவல் ஆணையர் Sabarudin Rahmat தெரிவித்தார். 

நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அதிகாலை 6.30 மணிக்குப் பேருந்து ஓட்டுநர் கை கால்கள் தனி தனியாக கிடந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பேருந்து நிலையத்தின் CCTV காணொலிகளைப் பரிசோதித்த போது 60 வயது பெண்ணைத் தெருநாய்கள் கொடூரமாகக் கடித்து குதறியது தெரிய வந்ததாக Sabarudin Rahmat தெரிவித்தார்.

Seorang wanita berusia 60 tahun maut selepas diserang sekumpulan anjing liar di terminal bas Kunak, Sabah. Serangan berlaku awal pagi dan mayatnya ditemui oleh pemandu bas. Rakaman CCTV mengesahkan kejadian itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *