நான் முதலமைச்சராக ஆசைப்பட்டேன் - நடிகனும் நாட்டை ஆளலாம் - நடிகர் சிவகுமார்!

top-news
FREE WEBSITE AD

கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த நடிகர் சிவகுமார், தமிழக அரசியலில் நடிகர்களின் பங்களிப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

“நடிகனும் நாட்டை ஆள முடியும் என்று முதன்முதலில் நிரூபித்துக் காட்டியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அவருக்குப் பிறகு அப்படி ஒரு ஆளுமையை இன்றுவரை யாரும் பார்க்கவில்லை, இனி ஒருவரும் அவருக்கு இணையாக வரவும் முடியாது” என்று புகழாரம் சூட்டினார். எம்ஜிஆரின் அரசியல் வெற்றியை யாராலும் மிஞ்ச முடியாது என்பது அவரது பேச்சின் மையக்கருத்தாக இருந்தது.

தொடர்ந்து பேசிய அவர், உலகப்புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன் அரசியலில் சந்தித்த சவால்களைச் சுட்டிக்காட்டினார். “உலகிலேயே மிகச்சிறந்த நடிகர் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களே அரசியலில் தோற்றுப்போனார் என்பதுதான் யதார்த்தம். நாட்டை ஆண்ட எம்ஜிஆருக்கு வாரிசு கிடையாது; அதேபோல் சிவாஜி போன்ற மகா கலைஞர்கள் கூட அரசியலில் வெற்றிபெற முடியவில்லை” எனக் குறிப்பிட்ட அவர், சினிமா புகழுக்கும் அரசியல் வெற்றிக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியைக் கோடிட்டுக் காட்டினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், செய்தியாளர் ஒருவர் “நீங்கள் எப்போது அரசியல் பேசுவீர்கள்?” என்று கேட்டதற்கு, சிவகுமார் தனது பாணியில் ஒரு சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்தார். “நான் காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் அந்த வாய்ப்பு துரதிர்ஷ்டவசமாகத் தவறிப்போய்விட்டது  என்று அவர் நகைச்சுவையாகக் கூறியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *