176 வெளிநாட்டினர் கைது! கோலாலம்பூர் முழுவதும் சோதனை!

top-news

ஜனவரி 23,

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் புக்கிட் பிந்தாங்கில் நடத்திய சோதனை நடவடிக்கையில் 176 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு கோலாலம்பூர் நகராண்மைக் கழகமும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையும் சோதனை நடத்தியதில் Bangladesh, Myanmar, Indonesia, Nepal, Pakistan, Mesir, Sudan ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்தது கண்டறியப்பட்டதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார். 

சுற்றுலா பயணியாக மலேசியாவுக்குள் நுழைந்து வணிகத்தில் ஈடுபடுவது, கடப்பிதழைப் புதுப்பிக்காமல் இருத்தல், எந்தவோர் ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருத்தல் எனும் குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இச்சோதனையில் மொத்தம் 176 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Jabatan Imigresen Kuala Lumpur menahan 176 warga asing di Jalan Alor, Bukit Bintang, dalam operasi dengan kerjasama DBKL. Mereka yang ditahan termasuk warga Bangladesh, Myanmar, Indonesia, Nepal, Pakistan, Mesir, dan Sudan atas kesalahan tiada dokumen sah dan tinggal lebih masa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *