காணாமல் போன முதியவர் 4 நாட்களுக்குப் பின் சடலமாக் மீட்கப்பட்டார்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
பங்கோர் கடற்கரையில் ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து அது 4 நாள்களுக்கு முன் காணாமல் போனதாக நம்பப்படும் 87 வயது முதியவரின் உடல் என Manjung மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman உறுதிப்படுத்தினார்.
காலை 11.24 மணியளவில் பங்கோர் கடற்கரையில் சடலம் மிதப்பதாகப் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் பிரேதப்பரிசோதனையில் அவரை அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரேதப்பரிசோதனையில் குற்றவியல் கூறுகளுக்கான அடையாளங்கள் இல்லை என்றும் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஜொகூரைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 நாள்களுக்கு முன்னர் 87 வயது முதியவரைக் காணவில்லை என பங்கோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையும் Hasbullah Abd Rahman சுட்டிக்காட்டினார்.
Mayat lelaki warga emas, 87 tahun yang dilaporkan hilang ditemui lemas di pesisir pantai Pasir Bogak, Pulau Pangkor. Bedah siasat mengesahkan punca kematian akibat lemas dan kes diklasifikasikan sebagai mati mengejut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *