மேற்கு வங்காளத்தில் 2-ஆவது கட்ட தேர்தல்: 142 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
- Surendran Sumdraraj
- 29 Apr, 2026
இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலின் 2-ஆவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இன்று நடைபெறும் இந்த கட்டத்தில் 142 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 3.2 கோடி வாக்காளர்கள் இந்த கட்டத்தில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர்.
இந்த தேர்தலில் 1,400-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திரிணமூல் காங்கிரஸ் (TMC), பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலின் முக்கிய கட்டமாக கருதப்படும் இந்த வாக்குப்பதிவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புப் படையினரும் மாநில காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்காளம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுவதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



