தேமுவிலிருந்து மசீச நீக்கப்படாது- ஸாஹிட் திட்டவட்டம்!

- Muthu Kumar
- 05 Feb, 2025
கோலாலம்பூர், . 5 -
தேசிய முன்னனியிலிருந்து (தேமு) மசீச நீக்கப்படாது. அது குறித்து அக்கூட்டணி இது நாள் வரையில் யாருடனும் கலந்து பேசியது இல்லை என்று. தேமு தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.தனது முக்கியமான உறுப்புக் கட்சிகளையும் நண்பர்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தேசிய முன்னணி தீர்க்கமாக இருப்பதாக, துணைப் பிரதமருமான ஸாஹிட் கூறியுள்ளார்.
“தேசிய முன்னணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஓர் உறுப்புக் கட்சியையும் நீக்குவது தொடர்பிலான எந்த ஓர் அழைப்புக்கும் நாங்கள் மதிமயங்கிவிட மாட்டோம் என்று. அம்னோ தலைவருமான ஸாஹிட் பெர்னாமா செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.தேசிய முன்னணியிலிருந்து மசீசவை அம்னோ வெளியேற்ற வேண்டும் என்று சில "வெளியாட்கள்" பரிந்துரைத்திருப்பதாக, அண்மையில் சீன நாளிதழுக்கு வழங்கி இருந்த ஒரு நேர்காணலில் மசீச தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியிருந்தார்
அம்னோவுடன் சேர்ந்து சீன சமூகத்திற்கு மசீச துரோகம் செய்து வருவதாக, அந்த "வெளியாட்கள் இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டி இருந்ததாகவும் ஆனால், தற்போது அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக் கொண்டு அவர்களே அம்னோவுடன் தற்போது நெருக்கமாக இருப்பதாகவும் கா சியோங் கூறியிருந்தார்.
இந்நிலையில், அனைத்து உறுப்புக் கட்சிகளின் இணக்கமின்றி, தேசிய முன்னணியிலிருந்து மசீசவை அம்னோ நீக்குவது சாத்தியமாகாது என்று. அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸர்காசி நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கூறியிருந்தார்."அம்னோவை யாரும் தன் வசமாக்கிக் கொள்வது சாத்தியமற்றது மற்றும் ஜசெக அவ்வாறு செய்ய துணியவில்லை. மேலும், (ஓர் உறுப்புக் கட்சியை நீக்குவதற்கு உறுப்புக் கட்சிகளிடமிருந்து ஒருமித்த இணக்கமும் இருக்க வேண்டும் என்று, ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினருமான புவாட் ஒரு முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"ஆதலால், மசீச தனது சொந்த நிழலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அம்னோவைப் போன்று எந்த ஒரு கட்சிக்கும் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலிருந்து மீண்டு வர நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும். இதில் யாரும் யாரையும் குற்றம் சொல்லக் கூடாது என்று புவாட் தெரிவித்திருந்தார்.
அமனோ மற்றும் மசீசவைத் தவிர்த்து தேசிய முன்னணியில் மஇகா மற்றும் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சபா ஆகிய இரு கட்சிகளும் உறுப்புக் கட்சிகளாக இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *