நான் கருத்து தெரிவிக்கமாட்டேன்!- நஜிப் அட்டெண்டம் குறித்து AG

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன 8: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கான அனுமதி, சட்டத்துறை அலுவலகத்திற்குக் கிடைத்ததா என்ற கேள்விகளை சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் புறக்கணித்துள்ளார்.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் சட்ட ஆண்டின் தொடக்க விழாவில் இது குறித்து கேள்வி எழுப்பிய போது “நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்" என்று கூறினார்.

நஜிப்பின் வழக்கறிஞர் ஷஃபீ அப்துல்லா, திங்களன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஜன. 29, 2024 அன்று அரண்மனையால் அப்போதைய சட்டத்துறை தலைவர் அகமது தெரிருடின் சலேவுக்கு அனுப்பப்பட்டது என்று கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *