மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு மீட்டர் முதலை!
- Muthu Kumar
- 06 Jan, 2025
ஷா ஆலம், ஜன 6:
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) நேற்று இரவு பூலாவ் கெத்தாமில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு மீட்டர் முதலையைப் பிடித்தது.
மீனவர்கள் மீன்பிடி வலைகளை சரி செய்ய முயன்றபோது 120 கிலோ எடையுள்ள முதலை கண்டுபிடிக்கப்பட்டதை சிலாங்கூர் மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.முதலை தேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



