குவந்தான் நெடுஞ்சாலையில் விபத்து! இரு இந்தோனேசியர்கள் பலி

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், பிப் 22: குவாந்தான் நெடுஞ்சாலையில் உள்ள தாமன் டத்தோ ரஷீத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே இன்று காலை ஐந்து வாகனங்கள் மோதியதில் இரண்டு இந்தோனேசிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

காலை 8.15 மணியளவில் நடந்த விபத்தில் நுர்யாமா ஹெரி அடியான்டோ (45) மற்றும் டியான்டோ (56) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரோடுவா மைவி, அல்சா, புரோட்டான் வீரா, எக்ஸோரா மற்றும் ஒரு லாரி ஆகிய வாகனங்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

விசாரணையில், மைவி ஓட்டுநரும் ஒரு பயணியும் கெப்போங்கிலிருந்து இந்திரா மக்கோத்தாவுக்கு விரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​பாதையை மாற்ற முயன்றனர் என்பது தெரியவந்தது. இருப்பினும், திடீரென மற்றொரு வாகனத்திலிருந்து தண்ணீர் தெறித்ததால் அவர்களின் கண்ணாடி மறைக்கப்பட்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *