வெ. 6 லட்சம் லஞ்சம் தொடர்பில் அரசு மூத்த அதிகாரி உட்பட இருவர் கைது!

- Muthu Kumar
- 22 Jan, 2025
சிரம்பான்,ஜன. 22-
முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 6 லட்சம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஓர் அரசாங்க நிறுவனத்தின் துணை இயக்குநர் உட்பட இருவரை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்திருக்கிறது.
அந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த விண்ணப்பங்களை அங்கீகரித்ததற்கு கைமாறாக, 6 லட்சம் வெள்ளியை பேரம் பேசி அதைப் பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெகிரி செம்பிலான் எம்ஏசிசி அலுவலகத்தில் தங்களின் வாக்குமூலங்களை அளித்த பின்னர், நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு, 40 வயதுடைய அவ்விருவரும் அங்கு கைது
செய்யப்பட்டதாக, வட்டாரம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
'இவர்கள் இருவரும். கடந்த 2019ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் இக்குற்றத்தைப் புரிந்ததை, இதன் தொடர்பிலான பூர்வாங்க விசாரணை கண்டு பிடித்திருக்கிறது என்றும் அவ்வட்டாரம் கூறியது.
சிரம்பான் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நேற்று காலையில் எம்ஏசிசி விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து, இவ்விருவரையும் வரும் 26ஆம் தேதி வரையில் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கும் இவ்வுத்தரவை மாஜிஸ்டிரேட் சைட் ஃபாரிட் சைட் அலி வெளியிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *