அண்ணாமலைக்கு ஆதரவாக அமித்ஷாவை மிரளவிட்ட பா.ஜ.க தொண்டர்கள்!

top-news
FREE WEBSITE AD

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டமானது நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மேடையில் அமர்ந்தனர்.

இந்த கூட்டம் மாலை 3. 45 மணிக்கு தொடங்கிய போது மேடையில் இருந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பாஜக நிர்வாகிகளை பார்த்து கழுத்தில் இருக்கும் பாஜக துண்டை கையில் எடுத்து சுழற்றுங்கள் விசில் அடியுங்கள் உற்சாகமாக முழக்கமிடுங்கள் அமித்ஷா வரும்போது இது போன்று முழக்கத்தை எழுப்புங்கள் என கூறி உற்சாகப்படுத்தி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் என்ற முழக்கங்களை எழுப்புமாறு கூறினார்.

இதனை கேட்டு பாஜக நிர்வாகிகளும் விசில் அடித்து கையில் உள்ள துண்டுகளை சுழற்றி உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அப்போது திடிரென கூட்ட மேடைக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்த போது மைதானத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் ஐந்து நிமிடத்திற்கு மேலாக கையில் துண்டை வைத்துக்கொண்டு சுற்றியபடி விசில் அடித்து ஆரவாரமாக உற்சாகப்படுத்தினர். இதனைப் பார்த்த அண்ணாமலை நிர்வாகிகளை அமர சொல்லிய நெகிழ்ச்சியில் தலையை குனிந்தபடி அமர்ந்தார்.

இந்நிலையில் கூட்டம் தொடங்கி முதலில் பேசிய மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேசும்போது பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் என்று கூறியவுடன் அண்ணாமலை பெயரை உச்சரிக்கும் முன்பாகவே அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் கையில் துண்டை எடுத்து வீசி விசில் அடித்து கூச்சலிட்டபடி இருந்தனர்.

இதனால் அவர் பெயரை கூட சொல்ல முடியாத அளவிற்கு தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டே இருந்தனர். அப்போது மைக்கில் பேசிய பேராசிரியர் சீனிவாசன் அமித்ஷா வரும்போதும் இதே உற்சாகத்துடன் என வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடைக்கு வருகை தந்த நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்பு ஆற்றிய போது அண்ணாமலையின் பெயரைச் சொன்னபோது பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பாஜக துண்டுகளை சுழற்றிய படி விசில் அடித்து ஆரவாரம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனை அடுத்து மேடையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச வந்தபோது அவரை பேச தொடங்கவிடாமல் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் முழக்கமிட்டபடி இருந்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போது தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். மேடையில் அமித்ஷா அருகில் அண்ணாமலை இருந்தபோது நிர்வாகிகள் இதுபோன்று செய்ததை பார்த்து அமித்ஷா வியந்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமித்ஷா மேடையில் பேசத் தொடங்கி அண்ணாமலையின் பெயரை சொன்னபோது, தொடர்ந்து அங்கிருந்து நிர்வாகிகள் பாஜக துண்டை சுழற்றியபடி முழக்கமிட்டபடி இருந்தனர். ஆனால் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், இணையமைச்சர் வேல்முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரின் பெயர்களை உச்சரிக்கும் போது பாஜக நிர்வாகிகள் எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருந்தனர்.

மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட மேடையில், அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் அரங்கமே அதிர்ந்தது. பாஜக நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பியது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தமிழக பாஜகவில் அதிகளவிற்கு இருப்பதை வெளிக்காட்டியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *