எஸ்பிஎம் தேர்வுத்தாள் கசியவில்லை!

- Muthu Kumar
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 10-
2024ஆம் ஆண்டின் எஸ்பிஎம் சோதனைக்கான வரலாற்றுப் பாடத்தின் முதல் தேர்வுத் தாளும் இரண்டாவது தேர்வுத் தாளும் அத்தேர்வுக்கு முன்னரே வெளியாகி விட்டதாகக் கூறப்படுவதை கல்வியமைச்சு மறுத்துள்ளது. அந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதில், அக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள தேர்வுத்தாள்கள் போலியானவை ஆகும். அதில் காணப்படும் கேள்விகள் 2024 எஸ்பிஎம் வரலாற்றுப் பாடத்திற்கான கேள்விகள் அல்ல என்று கல்வியமைச்சு நேற்று விளக்கியது. இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு குறித்து மாணவர்கள் கலக்கமடையத் தேவையில்லை. தேர்வெழுதுவதில் அவர்கள் முழுகவனம் செலுத்தி வரவேண்டும் என்று அது அறிவுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *