தாதியர்கள், மருத்துவர்களுக்கான கூடுதல் வேலை நேர எதிர்ப்பு நகைச்சுவையாக உள்ளது-சிவநேசன் !

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தாப்பா ரோட், டிச.9-

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு அரசாங்க மருத்துவத்துறை சார்ந்த முன்களப்பணியளர்கள் (மருத்துவர்கள் தாதியர்கள்) எட்டு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே சத்தமின்றி பொறுமையாக நோயாளிகளை கவனிப்பதே கடமை என்று காலை மாலை இரவு என்று பாராமல் தங்கள் தியாகத்தின் வழி முன்னெடுத்து வருகின்றனர் என்று மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் கூறினார்.

தொழிற்சங்கத்தை சாராதவர்கள், இந்த கூடுதல் நேர வேலை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மருத்துவர்களுடன் சேர்ந்து சேவையாற்றும் தாதியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணியாற்ற நேரிட்டால், அதனை மாறுபட்ட கோணத்தில் பார்க்குமாயின் அது நாட்டின் நோயாளர் சமூகத்திற்கு மோசமான நிலையை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும் என்றும் சிவநேசன் மேலும் கூறினார்.

பேரா மாநிலத்தில் சுகாதாரத் துறையின் பணியாளர்கள் 27 ஆயிரம் பேர் இருக்கின்றனர். தவிர, 15 பெரிய மருத்துவமனைகள், 5,600 நோயாளர்களுக்கான படுக்கைகள், 89 அரசு கிளினிக்குகள், 126 நகர் புற டேசா கிளினிக்குகள், 18 நடமாடும் கிளினிக்குகள் (பல் கிளினிக் உட்பட), படகுகள், பேருந்துகள் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற வசதிகளை சுகாதார அமைச்சகம் வழங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

முன்களப் பணியாளர்கள் என்றால் அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுகின்றது.அவர்களின் பொறுப்பை நோக்கினால், நிபுணத்துவ மருத்துவர்கள் கூறும் மருந்துகளைத்தான் நோயாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவ விதி வரையறுக்கப்பட்டுள்ளது.தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவக் கவனமின்மை என்று மருத்துவ நிபுணர்தான் வழக்கைச் சந்திக்க நேரிடுகிறது என்றார். அதற்கு தாதியர்கள் பொறுப்பேற்க சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய சூழ்நிலையில் அரசாங்க கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நெருக்கடியில்தான் தாதியர்கள் மற்றும் மருத்துவர்களின் பணியும் கடமையும் கூடிக்கொண்டே போகிறது என அவர் விவரித்தார். இது குறித்து பொதுமக்களுக்கு தெரியாது. நோயாளிகளிடம் மட்டுமின்றி வருகை அளிக்கும் பொது மக்களிடமும் முன்களப் பணியாளர்கள் பணிவுடன் நடக்கின்றனர். மருத்துவ ரீதியாக கேட்கும் கேள்விகளுக்கு நேர்மறையான பதில் அளிக்கின்றனர் அந்த அளவுக்கு சுகாதார இலாகா வால் நிறைவான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மனித நேயத்துடன் தங்கள் வாழ்க்கையில் தாதியர்கள் செய்து வரும் தியாகத்தையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றனர். மேலும், சுகாதார ஆட்சிக்குழு மத்தியில் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கிட அவர்களின் சுகாதார நலனில் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில், பேரா மாநில ரீதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தாப்பா ரோட் விளையாட்டு மண்டபத்தில் நடந்தேறிய வலைப் பந்து போட்டியில் மொத்தம் மாவட்டங்களிருந்து 18 குழுக்கள் பங்கேற்றன. பேரா மாநில சுகாதார இலாகா ஏற்பாடு செய்துள்ளது. இதில் மருத்துவமனை மற்றும் அரசு கிளினிக்குகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து குழுவொன்றுக்கு தலா வெ.400 வீதம் செலுத்தி நடத்தினாலும் பேரா அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. அதிக அளவில் தாதியர்களே கலந்து கொண்ட இந்நிலையில் தங்களின் அபாரத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த இறுதிச் சுற்றில் முதல் நிலை வெற்றிக் குழுவுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் பெயரில் சுழற்சி முறையில் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு மே 12 இல் உலக தாதியர் தினத்தையொட்டி மேலும் பல்வேறு ஐந்து விதமான விளையாட்டு போட்டிகள் நடத்த ஆட்சிக்குழு சார்பில் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *